வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

BEST PRACTICES IN SCHOOLS

ஊரகப்பகுதி அரசுப்பள்ளியில் புரவலர் நன்கொடையில் ICT வசதி
--------------------------------------------------------------------------------------------------------
2009-10 ஆண்டில் திட்டத்தால் தரமுயர்த்தப் பட்ட குழந்தை விநாயகர் கோட்டை உயர்நிலைப்பள்ளி புதுக்கோட்டை ஆலங்குடி முக்கிய சாலையிலிருந்து  விலகிச்செல்லும் ஊரகச் சாலையில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது . பேருந்து வசதி இல்லாத உள்ளடங்கிய இந்த கிராமத்தில் உள்ள இப்பள்ளியில் LCD PROJECTOR மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டுவருகிறது . இந்த உபகரணங்கள் புதுக்கோட்டையில் உள்ள மாமலர் மருத்துவ மனை நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது . கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் 10.02.2017 அன்று இப்பள்ளியை பார்வையிட்ட போது எடுக்கப்பட்ட படம் .



இப்பள்ளியில் பத்தாம் நிலை மாணவர்களுக்கான  சிறப்பு வகுப்புகள் மாலை லை 4.30 முதல் 6.00 மணி வரையும் காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரையும் நடைபெற்று வருகின்றன . இவ்வகுப்புகளில் மாணவர்களுக்கு சிற்றுண்டி தலைமை ஆசிரியரால் ஊர் பொது மக்களாலும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List